Skip to main content

Posts

Featured

அப்பா, நான் உள்ளே வரலாமா…

  அத்தியாயம் -1   “ நான் சொல்ல மறந்துட்டேன் . நம்ப மாப்பிள்ளே கூட நான் முதல் தடவை அவா ஆத்துக்குப் போனப்ப அவர் என் கிட்டே ‘ என் அப்பாவும் , அம்மாவும் திடீர்ன்னு ஒரே நாள்ளே ‘ தவறிப் போனது க்கு ’ அப்புறமா , அவா ‘ காரியங்களே ’ எல்லாம் நான் பண்ணின பிறகு , எனக்கு இந்த வியசாயத்தைப் பத்தின ஒரு விஷயமும் தெரியாம ரொம்ப கஷ்டப் பட்டேன் . அதனால் ரொம்ப நஷ்டமும் பட்டேன் . எனக்கு மூனு வருஷமாச்சு விவசாயத்தேப் பத்தி எல்லா சமாசாரமும் தெரிஞ்சுக்க ’ ன்னு சொன்னார் . எனக்குக் கேக்க ரொம்ப கஷடமா இருந்தது ” என்று சொன்னான் சுந்தரம் .   கமலா கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ” நேக்கு என்னவோ சுந்தரம் சொல்றது தான் ‘ சரி ’ ன்னு படறது . அவன் சொல்றா மாதிரியே , அவன் உங்க கூட வந்து விவசாயத்தைப் பத்தின விஷய ங்களை எல்லாம் நன்னா கத்துண்டு வரட்டும் . உங்களுக்கு முடிஞ்ச அன்னிக்கு , நீங்கோ அவன் கூட போய் வாங்கோ . இன்னும் ஒரு சமாச்சாரம் . அவன் சொல்றா மாதிரி அவன் சிதம்பரம் போய் படிச்சுட்டு , அங்கேயே ஒரு வேலையைத் தேடிண்டான்னா ,

Latest Posts